/* */

தடை உத்தரவு காலத்திலும் டிக்டாக் வீடியோ: சாலைகளில் அச்சுறுத்தும் இளைஞர்கள்

– கைது செய்ய கோரிக்கை.

HIGHLIGHTS

தடை உத்தரவு காலத்திலும் டிக்டாக் வீடியோ: சாலைகளில் அச்சுறுத்தும் இளைஞர்கள்
X

கொரோனா பரவல் இரண்டாவது அலை தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு அனைத்து துறைகளையும் முழுமையாக ஈடுபடுத்தி தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனாவின் பரவலால் ஒரு புறம் மக்கள் அச்சம் அடைந்து வரும் வேளையில், அதன் தாக்கத்தை உணராத சில இளைஞர்கள் ஊரடங்கையும் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் மேலஉளூரை சேர்ந்த முகேஷ்குமார், சந்தோஷ்குமார், முருகானந்தம், கபிலன் ஆகிய இளைஞர்கள் தஞ்சாவூர் - ஒரத்தநாடு சாலையில் இருசக்கர வாகனத்தில் பட்டாக்கத்தி உடன் நின்று கொண்டு டிக்டாக் வீடியோ செய்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. அரசு எதற்கு தடை உத்தரவு விதித்துள்ளது என்று கூட உணராமல் சாலைகளில் செல்லும் மக்களை அச்சுறுத்தும் விதமாக பட்டாகத்தியுடன் வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On: 31 May 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  2. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    நண்பா..மனைவியை லவ் பண்ணுடா..! திருமண வாழ்த்து..!
  4. இந்தியா
    பெங்களூரு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சியில் அவசர...
  5. வானிலை
    வடமேற்கு இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, வெப்பநிலை 40 டிகிரிக்கு...
  6. வீடியோ
    DMK ஆட்சி, Kamarajar ஆட்சி Seeman சொன்ன பதில் !#seeman #seemanism #ntk...
  7. வீடியோ
    Kamarajar-ரிடம் படம் எடுக்க சொன்ன இயக்குநர் Sundaram ?#seeman...
  8. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  9. சினிமா
    இந்தியன் 2 படத்தில் இந்தியன் 3 அப்டேட்.. சூப்பர் சர்ப்ரைஸ்!
  10. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...