அரிவாளை காட்டி பொதுமக்களை மிரட்டிய 4 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்

அரிவாளை காட்டி பொதுமக்களை மிரட்டிய 4 இளைஞர்களை போலீஸார்  கைது செய்தனர்
சில இளைஞர்கள் பயங்கர ஆயுதங்களை காட்டி அச்சுறுத்தி வருவதாக வல்லம் காவல் துறையினருக்கு தகவல் வந்தது

அரிவாளை காட்டி பொது மக்களை மிரட்டிய 4 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

தஞ்சை அருகே விளார் ரோடு வீரகாளியம்மன் கோவில் அருகில், அப்பகுதியில் செல்லும் பொதுமக்களை சில இளைஞர்கள் பயங்கர ஆயுதங்களை காட்டி அச்சுறுத்தி வருவதாக வல்லம் காவல் துறையினருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து அந்த பகுதிக்கு வந்த காவல்துறையினர், அரிவாளை காட்டி பொதுமக்களை மிரட்டி கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த லிங்கேஸ்வரன் (27), ஹரிஹரன் (27), நாகராஜன் (36), சதீஷ்குமார் (27) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நான்கு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story