/* */

புத்தகரம் கோயிலில் ஐம்பொன் சிலை திருடிய வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

மயிலாடுதுறை அருகே புத்தகரம் கோயிலில் ஐம்பொன் சிலை திருடிய வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

HIGHLIGHTS

புத்தகரம் கோயிலில் ஐம்பொன் சிலை திருடிய வழக்கில் முக்கிய குற்றவாளி கைது
X

சிலை கடத்தல் தடுப்புப்பிரிவால் கைது செய்யப்பட்ட ரஜினி

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள புத்தகரம் கிராமத்தில் காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் இருந்த காமாட்சி அம்மன் உலோகச்சிலை கடந்த 2014-ம் ஆண்டு திருடு போனது. இதுகுறித்து குத்தாலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு, தமிழக சிலை திருட்டு தடுப்பு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது. சிலை திருட்டு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும், மயிலாடுதுறை அருகே தாழஞ்சேரியைச் சேர்ந்த ரஜினி(46) தலைமறைவாக இருந்து வந்த நிலையில் அவரை போலீஸார் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ரஜினியை, சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்து கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ரஜினியை வருகிற 15-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து போலீஸார் அவரை கும்பகோணம் கிளை சிறையில் அடைத்தனர்.

Updated On: 1 March 2022 6:15 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்