/* */

கும்பகோணம்: பள்ளி கல்லூரிகளுக்கு ஆர்வமுடன் சென்ற மாணவர்கள்

கும்பகோணத்தில் பள்ளி கல்லூரிகள் திறந்ததை முன்னிட்டு ஆர்வமுடன் சென்ற பள்ளி கல்லூரி மாணவர்கள்

HIGHLIGHTS

கும்பகோணம்: பள்ளி கல்லூரிகளுக்கு ஆர்வமுடன் சென்ற மாணவர்கள்
X

கும்பகோணத்தில் பள்ளி கல்லூரிகள் திறந்ததை முன்னிட்டு ஆர்வமுடன் சென்ற பள்ளி   மாணவர்கள்

தமிழக அரசு பள்ளி கல்லூரிகளில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த அனுமதி அளித்ததை தொடர்ந்து கும்பகோணம் பகுதியில் அனைத்து பள்ளிகளிலும் 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்து வகுப்புகளில் கலந்து கொண்டனர்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்ததால் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை நேரில் சந்திக்க முடியாமல் ஆன்லைன் மூலம் படித்து வந்த மாணவ மாணவிகள் பள்ளிகளுக்கு நேரில் வந்திருந்து ஒருவரை ஒருவர் சந்தித்ததில் மகிழ்ச்சியடைந்ததாக தெரிவித்தனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டிருந்தது. மாணவ மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. ஆன்லைன் மூலம் நடத்தப்படும் வகுப்புகள் மற்றும் தேர்வுகளில் கலந்து கொள்வதில் கிராமப்புற மாணவ மாணவிகளுக்கு பல்வேறு சிரமங்கள் சிக்கல்கள் ஏற்பட்டு வந்தது.

குறிப்பாக ஆன்லைன் வகுப்புகளில் நடத்தப்படும் பாடங்களில் ஏற்படும் சந்தேகங்கள் குறித்து வகுப்பாசிரியர்களிடம் கேட்டு தெளிவு பெற முடியாமலும், இணையதள இணைப்பு கிடைப்பதிலும் பெரும் சிரமங்கள் இருந்ததால் பல மாணவ மாணவிகள் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் முதல் 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்பு செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதை தொடர்ந்து மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் ஆர்வத்துடன் வகுப்புகளில் கலந்து கொண்டனர்.

Updated On: 1 Sep 2021 12:19 PM GMT

Related News

Latest News

  1. உசிலம்பட்டி
    மதுரை அருகே திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வாகனம்
  2. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!
  3. வீடியோ
    மீண்டும் வெடித்தது Suriya-வின் சர்ச்சை மும்பையில் என்ன நடக்கிறது ? |...
  4. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
  6. ஈரோடு
    சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்லூரியில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  7. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  8. ஈரோடு
    சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்:...
  9. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  10. கோவை மாநகர்
    பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர்...