/* */

நள்ளிரவில் பெட்ரோல் திருட்டு

ஆறு பேர் கொண்ட இளைஞர்கள் நள்ளிரவில், இரு சக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோல் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

HIGHLIGHTS

நள்ளிரவில் பெட்ரோல் திருட்டு
X

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கல்யாணராமன் தெருவில் சாலைகளில் நிறுத்த வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களில் தொடர்ந்து பெட்ரோல் திருட்டு போவது வாடிக்கையாகியுள்ளது.

இந்நிலையில் அதேபகுதியில் செல்வகணபதி என்கிற அடுக்கு மாடி குடியிருப்பில், ஆறு பேர் கொண்ட இளைஞர்கள் கடந்த 10 ஆம் தேதி இரவு இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்து,

கேட் ஏறி குதித்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் திருடும் காட்சிகள் அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமேராவில் பதிவாகியுள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கும்பகோணம் கிழக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கும்பகோணத்தை சுற்றியுள்ள பகுதிகளில், இரவு நேரங்களில் சாலைகளில் நிறுத்த வைக்கப்பட்டிருக்கும் இரு சக்கர வாகனங்களில் இருந்து பெட்ரோல் திருடு போவதாக தொடர்கதையாகி இருப்பதாகவும் எனவே காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 15 May 2021 1:30 PM GMT

Related News