காந்தி சிலையிடம் மனு அளித்த விவசாயிகள்: கும்பகோணத்தில் நூதன கோரிக்கை
கும்பகோணம் உச்சிப்பிள்ளையார்கோயில் முன்பு, காந்தி சிலையிடம் மனு அளித்த விவசாயிகள்.
கும்பகோணம் உச்சிப்பிள்ளையார்கோயில் முன்பு ஏராளமான விவசாயிகள் திரண்டு, 11 சிதறு தேங்காய் உடைத்தும், உச்சிப்பிள்ளையார் கோயில் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர் மாலை அணிவித்தும், உதிரி மலர்கள் தூவியும், அவரிடம் கோரிக்கை மனு சமர்பித்து, தேசியக்கொடி ஏந்தி நூதன கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு, வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்; தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் பிரதமர், மத்திய நிதியமைச்சர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மீண்டும் மத்திய அரசை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் முழக்கம் எழுப்பப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu