/* */

ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் விவசாயிகளுக்கு கால்நடைகள் வழங்கல்

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் வட்டார ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் விவசாயிகளுக்கு கால்நடைகள் வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் விவசாயிகளுக்கு கால்நடைகள் வழங்கல்
X

கால்நடைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யும் டாக்டர்கள்.

தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் விவசாயிகளுக்கு கால்நடைகள் வழங்கப்பட்டன. மதுக்கூர் வட்டாரத்தில் முத்துப்பேட்டை சந்தையில் கறவை மாடு மற்றும் ஆடுகள் வாங்கப்பட்டன. அவைகள் உரிய கால்நடை மருத்துவர்கள் மூலம் மருத்துவ ஆய்வு செய்யப்பட்டு காப்பீடு செய்யப்பட்டன. மதுக்கூர் வட்டார ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம் அண்டமி, வேப்பங்குளம் நெம்மேலி, ஒலயகுன்னம், கன்னியாகுறிச்சி புளியங்குடி மற்றும் பாவாஜி கோட்டை ஆகிய கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் தேர்வு செய்யப்பட்ட 50 விவசாயிகளுக்கும் வேளாண்மை, கால்நடை, தோட்டக்கலை ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து ஒரு விவசாயிக்கு ரூ. 45ஆயிரம் என்ற கணக்கில் 50 சத மானியத்துடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கறவை மாடு மற்றும் 10 ஆடுகள் என ரூ.30 ஆயிரம் மானியமாக விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. காப்பீட்டு பணி முடித்து உரிய ஆவணங்கள் கால்நடை மருத்துவர்களால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டப் பின் அவர்களின் பரிந்துரையுடன் வேளாண் இணை இயக்குனர ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு வருகிறது.

இன்றைய தினம் மேற்கண்ட ஏழு கிராமங்களில் ஒலயகுன்னம், புளியகுடி கிராமம் தவிர்த்து பிற கிராமங்களைச் சேர்ந்த 34 விவசாயிகளுக்கு அவர்கள் வாங்கிய கறவை மாடு மற்றும் பத்து ஆடுகளுக்கு காப்பீட்டு பணிகளை கால்நடை மருத்துவர்கள் கார்த்திகேயன், சங்கர், இளவரசி ஆகியோர் செய்தனர். முத்துப்பேட்டை கால்நடை சந்தையில் கால்நடை மருத்துவர்களின் உதவியாளர்கள், வேளாண் உதவி அலுவலர்கள் பூமிநாதன், சுரேஷ், ஜெரால்ட், முருகேஷ், தினேஷ் மற்றும் கார்த்திக் ஆகியோரின் உதவியுடன் கால்நடைகள் வாங்குவது நடைபெற்றது.

ஆவணப்படுத்தும் பணிகளை அட்மா திட்ட பணியாளர்கள் சுகிதா ராஜு, ஐயா மணி மற்றும் சிசி பணியாளர்கள் கிருஷ்ணமூர்த்தி பவித்ரா மற்றும் பவதாரணி மற்றும் இன்சூரன்ஸ் திட்ட அலுவலர்கள் மணி, சரண் மற்றும் சுதன் ஆகியோர் செய்து இருந்தனர். வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி, வேளாண் அலுவலர் சாந்தி மற்றும் வேளாண் துணை அலுவலர் அன்புமணி, உதவி விதை அலுவலர் இளங்கோ ஆகியோர் பணிகளை மேல் ஆய்வு செய்தனர்.

Updated On: 3 Feb 2022 5:12 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  3. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  4. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  5. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  6. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  7. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  8. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  9. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  10. அருப்புக்கோட்டை
    அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளை பாராட்டிய அமைச்சர்!