/* */

குட்டிகளுடன்சுற்றித் திரிந்த காட்டு யானை: பொதுமக்கள் அச்சம்

கடையநல்லூர் கல்லாற்றுப் பகுதிகளில் குட்டிகளுடன்சுற்றித் திரிந்த காட்டு யானைகளை வனத்துக்குள் அனுப்பும் பணி தீவிரம்.

HIGHLIGHTS

குட்டிகளுடன்சுற்றித் திரிந்த காட்டு யானை: பொதுமக்கள் அச்சம்
X

குட்டிகளுடன் சுற்றித் திரியும் காட்டு யானை.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பல ஏக்கரில் விளைநிலங்கள் உள்ளது. அதில் விவசாயிகள் தென்னை, வாழை, மா, நெற்பயிர்கள் போன்றவற்றை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். அவ்வப்போது காட்டு யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்வது வழக்கம்.

இன்று கடையநல்லூர் பீட் கல்லாறு காட்டுப்பகுதிகளில் 2 குட்டிகளுடன் 7 காட்டு யானைகள் சுற்றித் திரிவதாக அப்பகுதி விவசாயிகள் கடையநல்லூர் வான ரேஞ்சர் சுரேஷ்டம் தகவல் அளித்தனர். அதன் பேரில் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடையநல்லூர் பீட் வனவர் முருகேசன் தலைமையில் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் விவசாயிகள் அங்கேயே முகாமிட்டு யானைகளை, வெடிவைத்து சைரன் ஒளித்து இரவுபகலாக வனத்துக்குள் தீவிரமாக விரட்டி வருகின்றனர்.

எனவே கல்லாறு வனப்பகுதிகளில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் கடையநல்லூர் பொதுமக்கள் குளிப்பதற்கு மேற்கு தொடர்ச்சி மலை அருகே உள்ள கல்லாறு பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் என கடையநல்லூர் வன ரேஞ்சர் சுரேஷ் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.

Updated On: 20 May 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!