/* */

சேலம் மாவட்டத்தில் மீண்டும் தொடங்கியது தடுப்பூசி முகாம்

சேலம் மாவட்டத்தில், 8 நாட்களுக்கு பிறகு இன்று தடுப்பூசி முகாம் தொடங்கியுள்ளது. பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

சேலம் மாவட்டத்தில் மீண்டும் தொடங்கியது தடுப்பூசி முகாம்
X

சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் 138 மையங்கள் மூலம் பொதுமக்களுக்கு கோவாக்சின் மற்றும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்பட்டு வந்தது. கடந்த 3 ஆம் தேதி 138 மையங்கள் மூலம் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில் தட்டுப்பாடு காரணமாக தொடர்ந்து 8 நாட்களாக மாவட்டம் முழுவதும் உள்ள தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், சென்னையில் இருந்து சேலத்திற்கு தடுப்பூசி வந்ததையடுத்து, இன்று மாவட்டம் முழுவதும் 138 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் இன்றைய தினம் 22,640 பேருக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 8 நாட்களுக்கு பிறகு தடுப்பூசி முகாம் நடைபெறுவதால் அதிகாலை 4 மணி முதலே தடுப்பூசி போட ஆர்வத்துடன் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

குறைந்த எண்ணிக்கையிலான நபர்களுக்கே தடுப்பூசி போடப்படுவதால் பெரும்பாலானோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். 8 நாட்களுக்கு பிறகு தடுப்பூசி முகாம் நடந்தாலும் கோவீசீல்டு மட்டுமே போடப்படுகிறது, கோவாக்சின் தடுப்பூசி போடப்படவில்லை. இதனால் ஏற்கனவே முதல் தவணையாக கோவாக்சின் போட்டுக்கொண்டவர்கள் உரிய தேதியில் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.

Updated On: 12 July 2021 3:32 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  3. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  4. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  5. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  6. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  7. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  8. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  10. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...