சேலம் மாநகராட்சியில் இன்று காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும் இடங்கள்
சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ்
சேலம் மாநகராட்சியில் கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சிப் பகுதிகளில் நோய் தொற்று அறிகுறி உள்ளவர்களை வீடு வீடாகச் சென்று கண்டறிந்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கும் வகையில், காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அவ்வகையில் மாநகராட்சிப் பகுதிகளில் இன்று காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ரெட்டிப்பட்டி, அண்ணாபுரம், சொட்டையன் தெரு, துரைசாமி நகர், வாட்டர் போர்டு காலனி, சின்ன கொல்லப்பட்டி, லட்சுமி சுந்தர் நகர், தேவங்கா பிள்ளையார் கோவில் தெரு, சக்தி நகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முகாம் நடைபெறுகிறது.
இன்று பகல் 12.00 முதல் 2.00 மணி வரை பெருமாள் மலை அடிவாரம், தர்ம நகர், மொரம்புகாடு, ரத்தினம் தெரு, கே.எம்.எஸ்.கார்டன், ஆத்துகாடு, மரவனேரி, மாணிக்கம் தெரு, தில்லை நகர், நாராயண நகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும்.
இன்று பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை ஜாகீர் அம்மாப்பாளையம் எட்டிக்குட்டை தெரு, கபிலர் தெரு, போடிநாயக்கன்பட்டி, முல்லாக்காடு, மல்லயன்காடு, ஜான்சன்பேட் கிழக்கு, கோவிந்த கவுண்டர் தோட்டம், ஜலால்கான் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் என 48 இடங்களில் இந்த சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் இதை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu