/* */

சேலத்தில் இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா சிகிச்சை அளிக்கத் தடை

சேலத்தில் விதிமுறைகளை முறையாக பின்பற்றாத இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா சிகிச்சை அளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சேலத்தில் இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா சிகிச்சை அளிக்கத் தடை
X

சேலத்தில் விதிமுறைகளை முறையாக பின்பற்றாத இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா சிகிச்சை அளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சேலம் ஐந்துரோடு பகுதியில் இயங்கும் குறிஞ்சி மருத்துவமனை மற்றும் டால்மியா போர்டு பகுதியில் உள்ள மணிபால் மருத்துவமனை இனி கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க மாவட்ட சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது.

இந்த மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாகுறை எனக் கூறி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை திடீரென வேறு மருத்துவமனைக்கு செல்ல உறவினர்களிடம் கூறுவதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் சுகாதாரத் துறை நடத்திய ஆய்வில் ஆக்ஸிஜன் அளவை முறையாக கையாளவில்லை என்பதும், கொரோனா விதிமுறைக்கு எதிராக செயல்பட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த இரண்டு மருத்துவமனைகளும் இனி கொரோனா சிகிச்சை அளிக்க தடைவிதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை குணமடையும் வரை வெளியேற்றக் கூடாது என்றும் புதிதாக கொரோனா நோயாளிகளை அனுமதிக்கக்கூடாது என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Updated On: 19 May 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  5. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  7. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  10. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...