/* */

போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: காரணம் இதுதான்!

சேலத்தில், குடும்பத் தகராறில் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்:  காரணம் இதுதான்!
X

மாதிரி படம்

சேலம், கிச்சிப்பாளையம் அருகே சன்னியாசிகுண்டு பகுதி, மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் லோகு (வயது 50). இவரது மனைவி தேவி (வயது 45). இவர்களுக்கு இடையே குடும்பத்தகராறு இருந்து வந்தது. இதில், ஆவேசத்தில் லோகு, தனது மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில், தேவி புகார் செய்தார். அதன்பேரில், விசாரணைக்கு வருமாறு லோகு, தேவி ஆகிய இருவரையும் போலீசார் அழைத்திருந்தனர். அதன்படி கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக தேவி வந்திருந்தார்.

அப்போது, திடீரென உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை பார்த்த போலீசார், உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

குடும்பத் தகராறில், போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக்கு ஆஜரான பெண், தற்கொலைக்கு முயன்ற சம்பவம், சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Updated On: 25 April 2021 3:21 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  3. கோவை மாநகர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
  4. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  5. பொன்னேரி
    தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2.வயது சிறுமி உயிரிழப்பு
  6. ஆன்மீகம்
    புத்த பூர்ணிமா எப்படி கொண்டாடுகிறோம்..?
  7. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகையும் மற்ற மாநிலங்களில் கொண்டாடும் விதமும்
  8. பூந்தமல்லி
    வெங்கல் அருகே லாரிகளை சிறை பிடித்து மக்கள் போராட்டம்
  9. ஆன்மீகம்
    தமிழக கோயில்களில் யாழிக்கு தனி இடம் ஒதுக்க காரணம் என்ன?
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே கல்லறை தோட்டத்தில் சடலம் புதைக்க மக்கள் எதிர்ப்பு