/* */

சேலம்: 2 இறைச்சிக்கடைகளுக்கு சீல்: 25 கிலோ கறி பறிமுதல்!

சேலத்தில் முழு ஊரடங்கை மீறி செயல்பட்ட இரண்டு இறைச்சிக் கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். 25 கிலோ இறைச்சிகளையும் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

சேலம்: 2 இறைச்சிக்கடைகளுக்கு சீல்: 25 கிலோ கறி பறிமுதல்!
X
அதிகாரிகள் இறைச்சியை பறிமுதல் செய்த காட்சி.

தமிழகத்தில் நோய் தடுப்பு நடவடிக்கையாக வரும் 24ஆம் தேதி வரை பொது முடக்கம் அமலில் உள்ளது. இதனிடையே இன்றைய தினம் எவ்வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் அரசு உத்தரவை மீறி இறைச்சி கடைகள் செயல்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதனையடுத்து அப்பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தடையை மீறி செயல்பட்ட 2 இறைச்சி கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து அபராதம் விதித்தனர்.

அதேபகுதியில் வீட்டின் முன்பு சாலையில் வைத்து இறைச்சி விற்பனை செய்த நபருக்கு அபராதம் விதித்ததோடு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த இறைச்சிகளை பறிமுதல் செய்தனர். 3 கடைகளில் இருந்தும் சுமார் 25 கிலோ இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு, 8 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On: 16 May 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...