/* */

பெட்ரோல் விலை உயர்வு - சேலத்தில் இந்திய தொழிற்சங்க மையத்தினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல், கேஸ் விலை உயர்வை திரும்பப் பெறக்கோரி, சேலத்தில் இந்திய தொழிற்சங்க மையத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

பெட்ரோல் விலை உயர்வு - சேலத்தில் இந்திய தொழிற்சங்க மையத்தினர் ஆர்ப்பாட்டம்
X

பெட்ரோல், டீசல், விலை உயர்வை கண்டித்து, இந்திய தொழிற்சங்க மையம் சார்பில், சேலம் மாவட்ட ஊராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், கேஸ் விலை புதிய உச்சத்தை எட்டிக் கொண்டிருக்கிறது. விலை உயர்வை கண்டித்து , பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில், பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை திரும்பப் பெறக்கோரி, சேலம் மாவட்ட ஊராட்சி அலுவலகம் முன்பு, இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், இன்று நடைபெற்றது.

மாநில அமைப்புக்குழு உறுப்பினர் புவனேஸ்வரி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை திரும்பப் பெறக் கோரியும், மத்திய அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கொரோனா கால நிவாரணமாக 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என போராட்டம் வாயிலாக அரசுக்கு வலியுறுத்தினர்.

Updated On: 2 July 2021 6:41 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்