/* */

நெல் கொள்முதல் செய்ய அதிகாரிகளுக்கு லஞ்சம்: கள் இயக்கம் குற்றச்சாட்டு

அரசு கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்ய, அதிகாரிகளுக்கு அதிக லஞ்சம் தர வேண்டியுள்ளதாக, தமிழ்நாடு கள் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.

HIGHLIGHTS

நெல் கொள்முதல் செய்ய அதிகாரிகளுக்கு லஞ்சம்: கள் இயக்கம் குற்றச்சாட்டு
X

சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி.

இது தொடர்பாக, தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, சேலத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் போதிய மழை பொழிவால், நெல் உற்பத்தி அதிகரித்துள்ளது. ஆனால், அரசின் நெல் கொள்முதல் நிலையங்களில் முழுமையாக கொள்முதல் செய்ய முடியாத நிலை உள்ளது. தனியாரிடம் நெல் விற்பனை செய்தால், அரசின் விலையில் பாதிதான் கிடைக்கிறது.

அதுமட்டுமல்ல, நெல் உற்பத்தி அதிரித்துள்ளதால் விவசாயிகள் தங்ளின் நெல்லை கொள்முதல் செய்வதற்கு அதிகாரிகளுக்கு அதிக லஞ்சம் கொடுக்க வேண்டி உள்ளது. இப்பிரச்சனைகளுக்கு அரசு தீர்வு காணவேண்டும் என்றால், அரிசி ஏற்றுமதி செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பு சிதைந்துள்ளது. உள்ளாட்சி அமைப்பிடம் இருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்கள் அனைத்தையும் மீண்டும் வழங்கி, அனைத்து உள்ளாட்சி பொறுப்புகளுக்கும் சுயேட்சை சின்னத்தை கொண்டுதான் தேர்தல் நடத்த வேண்டும்.

மரவள்ளிக்கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் சுத்தமான ஜவ்வரிசி வெளிர் மஞ்சள் நிரம் கொண்டது. ஆனால் பெரும்பாலான ஆலைகள், ஜவ்வரிசியை வெண்மையாக்க அதில் ரசாயனங்களை கலக்கின்றனர். இது உடலுக்கு கேடு ஏற்படுத்துவதால் இந்தியா முழுவதும் ஜவ்வரிசி நுகர்வு என்பது வெகுவாக குறைந்துவிட்டது. இதனை தடுக்காவிட்டால், மரவள்ளி கிழங்கு விவசாயிகளுக்கு எதிர்காலம் இல்லாமல் போய்விடும் என்றார்.

Updated On: 6 Oct 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  3. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  4. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  6. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  7. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  8. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  9. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  10. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!