/* */

சேலம்: வழிபாட்டுக்கு அனுமதி மறுப்பு என கலெக்டரிடம் கிராம மக்கள் மனு

சேலம் அருகே, கோவிலில் வழிபாடு நடத்த பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக கூறி, கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

சேலம்: வழிபாட்டுக்கு அனுமதி மறுப்பு என கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
X

தலைவாசல் அருகே, பட்டியலின மக்களை கோவிலில் வழிபட அனுமதிக்கக்கோரி, சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த கிராம மக்கள்.

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள வடகுமரை கிராமத்தில், இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட, அருள்மிகு ஸ்ரீ காளகஸ்தீஸ்வரர் ஆலயம் மற்றும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயம் உள்ளன. இதனுள், பட்டியலின சமுதாய மக்களை வழிபாடு, திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சம்மந்தப்பட்ட கிராமத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்கள், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்தனர். இந்த இரு கோவில்களுக்கும் செல்லவும், வழிபாடு நடத்தவும் தங்களுக்கு அனுமதி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மனுவில் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Updated On: 15 Sep 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா