/* */

சேலம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் முதல் உயிரிழப்பு

சேலம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, மாவட்டத்தில் முதலாவது இறப்பு பதிவாகி உள்ளது.

HIGHLIGHTS

சேலம் மாவட்டத்தில்   கருப்பு பூஞ்சை  நோயால் முதல் உயிரிழப்பு
X

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே நாரைக்கிணறு தோட்டப்பகுதியை சேர்ந்த மறைந்த புருசோத்தமனின் மகன் ராஜேஸ்வர கவுதம் (29) திருமணமாகாத இவருக்கு, தாய், தம்பி உள்ளனர். இவர் பிறவியிலேயே பார்வை குறைபாடு உள்ளவர்.

எனினும், தன்னம்பிக்கையுடன் பட்டப்படிப்பு படித்த ராஜேஸ்வர கவுதம், பாரத் ஸ்டேட் வங்கியில் பணியில் சேர்ந்தார். கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக தம்மம்பட்டி பாரத் ஸ்டேட் வங்கியில் பணியாற்றி வந்த இவர், சில வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் குணமாகி வீடு திரும்பினார்.

ஆனால், அதன்பிறகு கண்ணில் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது. அதற்காக அவர் சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் மருத்துமனைகளில் சிகிச்சை பெற்று, இறுதியாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் கருப்பு பூஞ்சை தொற்று, மூளையை தாக்கி, ஒரு பக்கம் செயலிழக்கத் தொடங்கியது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதன் மூலம், சேலம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 3 Jun 2021 4:16 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  3. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  5. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  6. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  7. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  8. ஈரோடு
    ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெப்ப நோய் சிகிச்சைக்கு சிறப்பு...
  9. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  10. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...