/* */

போலி பணிநியமன ஆணை மோசடி: நடவடிக்கை கோரி ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 9 லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்தனர்.

HIGHLIGHTS

போலி பணிநியமன ஆணை மோசடி: நடவடிக்கை கோரி ஆட்சியர் அலுவலகத்தில்  புகார்
X

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க போலி பணி நியமன ஆணை மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி ஜங்கம சமுத்திரம் பகுதியை சேர்ந்த செல்வம் மற்றும் பாதிக்கப்பட்ட மூன்று பேர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைை வாங்கித் தருவதாக கூறி போலி பணி ஆணையை வழங்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்தனர்.

அந்த புகாரில், சேலம் சீலநாயக்கன்பட்டி சேர்ந்த தங்கமணி மற்றும் அவரது அண்ணன் காளிமுத்து ஆதி இரண்டு பேரும், நீதிமன்றத்தில் தட்டச்சர் பணிக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, தலா ரூ. 3,20,000 வீதம் 3 பேரிடம் மொத்தம் ரூ.9,60,000 வாங்கியுள்ளார்.

இதையடுத்து நீதிமன்ற பணி நியமன ஆணையை எங்களுக்கு அளித்தார். இதனையடுத்து பணிநியமன ஆணையை எடுத்துக்கொண்டு ஆத்தூர் நீதிமன்ற வளாகத்துக்கு சென்று கேட்டபோது, இந்த பணி நியமன ஆணை நீதிமன்ற சார்பில் வழங்கவில்லை. இது நீதிமன்ற முத்திரை மற்றும் நீதிபதி கையெழுத்து இல்லை என்றும் தெரிவித்தனர். இந்த ஆணை போலியானது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபரிடம் கேட்டபோது முன்னுக்கு பின்னாக தெரிவித்தார். பணத்தை திருப்பி கேட்டதற்கு தருவதாக கூறி ஏமாற்றி விட்டார். இதுகுறித்து கடந்த 2019ம் ஆண்டு மாவட்ட குற்றவியல் காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இதுவரை எங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் பணமும் மீட்டுத் தரவில்லை. மூன்றாண்டுகளாக வேலை இல்லாமலும் பணம் கிடைக்காததால் எங்கள் குடும்பம் மிகவும் அவதியுற்று வருகிறது. எனவே போலி ஆவணம் தயாரித்து ஏமாற்றிய இரண்டு நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Updated On: 11 Sep 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  4. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  7. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  8. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  9. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்