ஆளில்லாத கடையில் யாருக்கு டீ ? அத்துவானக்காட்டில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்
ஆள் நடமாட்டம் இல்லாத நடுகாட்டில் திறந்த வேனில் நின்றபடி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்.
HIGHLIGHTS
ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடந்த நடுகாட்டில் திறந்த வேனில் நின்றபடி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்.
தமிழகத்தில் வரும் 6ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பல்வேறு கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே சேலம் மாவட்டம் கெங்கவல்லி (தனி) சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நல்லதம்பி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இதனிடையே தம்மம்பட்டி அருகே உள்ள பச்சமலை பகுதியில் வாக்கு சேகரிப்பின் போது கூட்டணி கட்சியினர் யாரும் இல்லாமல் தனித்து விடப்பட்ட வேட்பாளர் நல்லதம்பி மற்றும் தனது ஆதரவாளர்களுடன் திறந்த வேனில் நின்றபடி ஆட்கள் நடமாட்டம் இல்லாத நடுகாட்டில் வாக்கு சேகரித்து சென்ற சம்பவம் அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.