/* */

எடப்பாடியில் பணம் வைத்து சூதாடிய 13 பேர் கைது

சேலம் மாவட்டம், எடப்பாடியில் பணம் வைத்து சீட்டாட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை, போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

எடப்பாடியில் பணம் வைத்து சூதாடிய 13 பேர் கைது
X

எடப்பாடியில் பணம் வைத்து சீட்டாட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்கள். 

சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதிகளில் நேற்று இரவு, காவல் ஆய்வாளர் பிராங்கிளின் உட்ரோ வில்சன், உதவி ஆய்வாளர் பெரியதம்பி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எடப்பாடி கவுண்டம்பட்டி அம்மன் கோவில் பகுதியில் பதிமூன்று பேர் சேர்ந்த ஒரு கும்பல் சீட்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

காவல்துறையினரை பார்த்து அவர்கள், அலறியடித்து தப்பிக்க முயற்சித்தனர். ஆனால் காவல்துறையினர் சுற்றி வளைத்து 13 பேரையும் கைது செய்தனர். கௌதம், ஆறுமுகம், மாது, தங்கபாண்டி, தங்கதுரை, கார்த்திகேயன், முருகேசன், பாலாஜி, செங்கோட்டையன், பெருமாள்,கிருஷ்ணன், உதயகுமார், பரத்குமார் ஆகிய 13 பேரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து 31 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம், செல்போன் இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.
Updated On: 15 July 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  6. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  10. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்