/* */

எடப்பாடி அருகே ஏரியை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விவசாயிகள் சாலை மறியல்

எடப்பாடி அருகே வெள்ளரி வெள்ளி ஏரியை உடைத்த மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

எடப்பாடி அருகே ஏரியை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விவசாயிகள் சாலை மறியல்
X

சாலை மறியலில் ஈடுபட்ட வெள்ளரிவெள்ளி கிராம விவசாயிகள்.

சேலம் மாவட்டம், எடப்பாடி அடுத்த வெள்ளரிவெள்ளி கிராமத்தில் உள்ள ஏரியில் 40 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த இரண்டு வருடங்களாக தண்ணீர் நிரம்பியுள்ள நிலையில், அப்பகுதியில் உள்ள 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த 26ம் தேதி மர்ம நபர்கள் ஏரியின் மதகு பகுதியை உடைத்துள்ளனர். இதனால் ஏரியில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதுதொடர்பாக அப்பகுதி விவசாயிகள் அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

எனவே இதனை கண்டித்து வெள்ளரிவெள்ளி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஏரியின் மதகை உடைத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வெள்ளரி வெள்ளி நான்கு ரோடு சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இத்தகவல் அறிந்த எடப்பாடி காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பூலாம்பட்டி காவல்துறையினர் சாலை மறியல் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஏரியில் உடைப்பு ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டு உடைப்பை சரி செய்ததால் விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு சென்றனர். இந்த சாலை மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Updated On: 2 Feb 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    வரும் வியாழன் அன்று வைகாசி விசாகம்; தமிழ் கடவுள் முருகனை வழிபடுங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பெயரின் முதல் எழுத்து ‘எஸ்’ என ஆரம்பிக்கிறதா? - ரொம்ப...
  3. லைஃப்ஸ்டைல்
    ரயில் பெட்டிகளில் வெள்ளை மற்றும் மஞ்சள் கோடுகள் இருப்பதை கவனித்து...
  4. லைஃப்ஸ்டைல்
    என்னுயிர் நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. அரசியல்
    நாடு முழுவதும் மாற்றத்திற்கான புயல் வீசுகிறது: சொல்கிறார் ராகுல்...
  6. லைஃப்ஸ்டைல்
    கருப்பு பேரீச்சம்பழம் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியத்தில் இவ்வளவு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    95 மேஜை, 288 பணியாளர்கள்: திருச்சி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ண...
  8. லைஃப்ஸ்டைல்
    வளையோசை கலகலவென ஓசை கேட்கும் வளைகாப்பு நிகழ்ச்சி..!
  9. தமிழ்நாடு
    புருவம் வழியாக மூளைக் கட்டிக்கான உலகின் முதல் கீஹோல் அறுவை சிகிச்சை:...
  10. அரசியல்
    காங்கிரஸ் சரிவுக்கு காரணம் அறியாமை, சோம்பேறித்தனம், ஆணவம்: சொல்கிறார்...