Begin typing your search above and press return to search.
ஆடிப்பெருக்கு விழாவுக்கு தடை: பூலாம்பட்டி பேரூராட்சி நிர்வாகம் அறிவிப்பு
கொரோனா தொற்று காரணமாக சேலம் மாவட்டம் பூலாம்பட்டியில் ஆடிப்பெருக்கு விழாவுக்கு தடை விதிக்கப்படுவதாக பேரூராட்சி நிர்வாகம் அறிவிப்பு
HIGHLIGHTS
இந்துக்களின் பண்டிகை கலாச்சார விழாக்களில் ஆடிப்பெருக்கு விழாவும் ஒன்று. இதில் ஆடி 1 ஆடி பதினெட்டு, ஆடி 28, ஆடி வெள்ளிக்கிழமை, ஆடி அமாவாசை என ஆடி மாதத்தில் மட்டும் அதிக பண்டிகை நாட்களாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக பண்டிகை விழாக்கள் மற்றும் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டும் ஆடிபெருக்கு விழாவிற்கு இரண்டாவது ஆண்டாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு சேலம் மாவட்டம் பூலாம்பட்டி பேரூராட்சி பகுதி கடைகளை மூட பேரூராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அப்பகுதி சிறு வியாபாரிகள் மற்றும் ஆடி 18 விழா கொண்டாட வரும் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.