/* */

ஆத்தூர் அருகே 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

ஆத்தூர் அருகே முறையாக குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

ஆத்தூர் அருகே 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்
X

ஆத்தூர் அருகே காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட 30வது வாட்டு ஏ எம் சி காலனிபகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு முறையாக குடிநீர் வழங்கவில்லை என்றும், ஆத்தூர் நகராட்சி அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும், போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 50க்கும் மேற்பட்ட பெண்கள் சேலம் - கடலூர் சாலையில் லீ பஜார் பகுதியில் திடீரென காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த ஆத்தூர் நகர போலீசார் மற்றும் நகராட்சி அலுவலர்களும் மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் உடனடியாக வழங்குவதாக உறுதியளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On: 1 Feb 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  2. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  3. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  4. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  5. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!
  6. கோவை மாநகர்
    காந்திபுரத்தில் பேருந்து மோதி தொழிலாளி பலி..!
  7. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  10. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!