/* */

அரக்கோணம் ரயில் நிலையத்தில் கிலோ கணக்கில் சிக்கிய தங்கம்

தங்கத்தை கொண்டு வந்த பயணியிடம் உரிய ஆவணங்கள் இல்லை என்பதால், சுங்கவரி துறையினரிடம் ஒப்படைக்க ரயில்வே காவல்துறை முடிவு

HIGHLIGHTS

அரக்கோணம் ரயில் நிலையத்தில் கிலோ கணக்கில் சிக்கிய தங்கம்
X
பைல் படம்

தன்பாத்தில் இருந்து ஆலப்புழா செல்லும் விரைவு ரயில் இன்று காலை அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு வந்தது. இந்த ரயில் பெட்டிகளில் அரக்கோணம் ரயில்வே காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது மர்ம நபர் ஒருவர் கையில் வைத்திருந்த பையில் கட்டுக்கட்டாக பணம் மற்றும் தங்க நகைகள் இருந்ததை கண்டு ரயில்வே போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர், அந்த நபரை அரக்கோணம் ரயில் நிலையத்தில் இறக்கி, ரயில்வே காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியபோது அவர் கொண்டு வந்த பணம் மற்றும் நகைக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.

மேலும், இது குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், அவர் பெயர் நாகராஜ் என்றும் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் தங்கம் வாங்கி வந்து கோவையில் தங்க வியாபாரம் செய்வதாகவும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்த அவரிடம் இருந்து பறிமுதல் செய்த நகை மற்றும் பணத்தை ரயில்வே போலீசார் சுங்கவரி துறையினரிடம் ஒப்படைக்க உள்ளனர்.

Updated On: 21 Aug 2022 6:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது