இராமநாதபுரத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய 590 பேர் மீது வழக்குப்பதிவு
இராமநாதபுரத்தில் ஜூன் மாதத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 590 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
இராமநாதபுரத்தில் ஜூன் மாதத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 590 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் காவல் உட்கோட்ட பகுதியில் கடந்த ஜூன் மாதம் அந்தந்த பகுதி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் போக்குவரத்து மற்றும் சாலை விதிகளை மீறியவர்கள் மீது வழக்குபதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டது.
இதில், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிச்சென்ற 40 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் சென்ற 363 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்ற 87 பேர் மீதும், சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றி சென்றதாக 9 பேர் மீதும், சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக 8 பேர் மீதும், இதர பிரிவுகளின் கீழ் 83 பேர் மீதும் என மொத்தம் 590 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.83 ஆயிரத்து 200 வசூலிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, கொரோனா பரவிவரும் நிலையில் அரசின் உத்தரவினை மதிக்காமல் முக கவசம் அணியாமல் சாலைகளில் சென்றதாக 38 பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. தேவையின்றி சாலைகளில் சுற்றித் திரிந்த ஒரு இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.