விவசாயப் பணியை பெருமைப்படுத்தும் தொண்டைமான் மன்னர் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு

விவசாயப் பணியை பெருமைப்படுத்தும் தொண்டைமான் மன்னர் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு

விவசாயத்தை போற்றிய தொண்டைமான் மன்னர் – ஏர் கலப்பையுடன் விவசாயி கோட்டுருவத்துடன் புதிய கல்வெட்டுச்சான்று கண்டுபிடிக்கப்பட்டது

Discovery of an inscription from the time of King Thondaiman glorifying agricultural work

விவசாயத்தை போற்றிய தொண்டைமான் மன்னர் – ஏர் கலப்பையுடன் விவசாயி கோட்டுருவத்துடன் புதிய கல்வெட்டுச்சான்று கண்டுபிடிப்பு.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டம், ஆத்தங்கரை விடுதி ஊராட்சிக்குட்பட்ட கீழ வாண்டான் விடுதி வயல்வெளியில் விசய ரெகுனாத ராயத் தொண்டை மானாரால் ஏற்படுத்தப்பட்ட விசய ரெகுநாதாய சமுத்திரம் எனும் பாசனத்திற்கான நீர்நிலை ஏற்படுத்தி, அதற்கான நீர் வெளிப்போக்கு அமைப்பான கலிங்கு அமைத்தது குறித்த தகவலடங்கிய புதிய கல்வெட்டு புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர் கரு ராஜேந்திரன், நிறுவனர் மணிகண்டன், ஆய்வுக் குழு உறுப்பினர்கள் கஸ்தூரி ரங்கன், முன்னாள் ஓய்வுபெற்ற ஆணையர் மணிசேகரன், ஆத்தங் கரை விடுதி தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர் பழனிச்சாமி ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கல்வெட்டின் சிறப்பம்சம் குறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனர் ஆ.மணிகண்டன் கூறியதாவது:

புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்கள் சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும், இயற்கை வளங்களை போற்றி வளர்ப்ப திலும், பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி வழங்குவதிலும் சிறந்து விளங்கினர்.குறிப்பாக தொண்டைமான் மன்னர்களின் சிறப்புகளாக, அவர்கள் அமைத்த நீர்நிலைகளையும், அரச நிர்வாக கட்ட மைப்புகளையுமே வரலாற்று ஆய்வாளர்கள் பெருமிதமாக கூறுகின்றனர்.

எனினும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டு களில் தொண்டைமான்களின் பெயரில் நீர்நிலை அமைக்கப் பட்டது குறித்த கல்வெட்டுகள் கண்டறியப்பட்டதாக சான்றுகள் இல்லை. இந்நிலையில் கீழ வாண்டான்விடுதி கலிங்கு கல்வெட்டு கண்டுபிடிப்பின் மூலம் , நூற்றாண்டு விழா காணும் ராஜகோபால தொண்டைமான் முன்னோரும் இரண்டாவது மன்னருமான விசயரெகுநாத ராய தொண்டைமான் பெயரில் அமைந்திருந்த பாசனநீர்நிலை , தொண்டைமான்கள் விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்தவர்கள் என்பதை வெளிப்படுத்தும் முக்கிய சான்றாக கிடைத்துள்ளது.

கல்வெட்டுச்செய்தி: இந்தக் கல்வெட்டில் ஸ்ரீ விசயரகுநாத ராய சமுத்திரம் அற்கிரகாரத்து கலிங்கில் என்ற தகவல் பொறிக்கப்பட்டி ருக்கிறது. அதன் கீழ் பகுதியில் ஏர் கலப்பையுடன் ஒரு விவசாயி நின்ற நிலையில் வரைக்கோட்டுருவமாக செதுக்கப்பட்டுள்ளது.இந்த இடத்திற்கு அருகிலுள்ள துவார் கிராமத்தில் அக்கிர காரம் என்ற குடியிருப்பு பகுதி இருந்திருப்பது குறித்து மக்கள் செவிவழிச் செய்தியாக தெரிவிக்கின்றனர்.இத்தகவல் மூலம் இவ்விடத்தின் அருகாமையில் இக்கலிங்கு அமைக்கப்பட்டு, அக்கிரகாரத்து கலிங்கில் என பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று கருதலாம்.

கல்வெட்டின் காலம்: தொண்டைமான் வம்சாவளியைச் சேர்ந்த இரண்டாவது மன்னர் விசயரகுநாத ராய தொண்டைமான் ஆட்சிக்கால மான பொ.ஆ 1730 முதல் 1769 ஆம் ஆண்டிற்குள்ளாக இந்த பாசன நீர்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை வெளிப் படுத்தும்வகையில் மன்னரின் பெயரிலேயே விசயரெகுனாத ராய சமுத்திரம் என்று பெயர் சூட்டப்பட்டு அர்ப்பணித்திருப் பதை இக்கல்வெட்டு உறுதி செய்கிறது.

விவசாயத்தை போற்றிய மன்னர்: இந்த நீர்நிலை அமைப்பு விவசாயத்துக்காகத்தான் ஏற்படுத் தியது என்பதை வெளிப்படுத்தும் வகையிலும், விவசாயப் பணியை பெருமைப்படுத்தும் வகையிலும் கல்வெட்டின் கீழ்புறம் கோட்டுருவமாககலப்பையுடன் கூடிய விவசாயி சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற விவசாயி சின்னம் பொறிக்கப்பட்ட கல்வெட்டு புதுக்கோட்டை மாவட்டத்தின் வேறு எந்த பகுதியிலும் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என்றார். இந்தக் கள ஆய்வின்போது துவார் உயர்நிலைப்பள்ளியின் தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story