/* */

டிரோன் மூலம் வேளாண்பயிர்களில் பயிர் பாதுகாப்பு மருந்துகள் தெளிக்க பயிற்சி

திருவரங்குளம் வட்டாரம் வேளாண்மை- உழவர் நலத்துறை சார்பில் டிரோன் மூலம் மருந்து தெளிக்க பயிற்சி அளிக்கப்பட்டது

HIGHLIGHTS

டிரோன் மூலம் வேளாண்பயிர்களில் பயிர் பாதுகாப்பு மருந்துகள் தெளிக்க பயிற்சி
X

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வட்டாரத்தில் வேளாண்மைத் - உழவர் நலத்துறையின் மூலம் அட்மா மாநில விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் வேளாண்மையில் டிரோன் மூலம் பயிர்களில் களைக் கொல்லி பூச்சிக்கொல்லி மற்றும் ஊட்டச் சத்துகளை தெளிப்பது தொடர்பான பயிற்சி வம்பன் வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்றது.

இந்தபயிற்சியில் புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர், மா.பெரியசாமி, வேளாண்மை துணை இயக்குநர், உழவர் பயிற்சி நிலையம், குடுமியான்மலை மரியரவி ஜெயக்குமார், வம்பன் வேளாண் உதவி இயக்குனர் ,வம்பன் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் யுவராஜா, வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த பயிற்சியில் கலந்து கொண்டு பேசிய வம்பன் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் டாக்டர் யுவராஜ் வேளாண்மையில் டிரோன்களின் பயன்பாடுகள் பற்றியும்,குறைந்த நேரத்தில் அதிக அளவு பரப்பில் தெளிப்பதற்கும், ஆட்கள் பற்றாக் குறையை குறைப்பதற்கும் , டிரோன் மூலம் தெளிப்பதால் தண்ணீர், பயிர் பாதுகாப்பு மருந்துகள் குறைந்த அளவு தேவைப்படுகிறது என்று கூறினார்.

அதனை தொடர்ந்து பேசிய டாக்டர்.செந்தில்குமார் பேசுகையில், விவசாய தொழிலாளர்களுக்கு ஏற்படும் உடல் நலக்கேடுகள் குறைகின்றது என்றும் இதன் மூலம் நெல், மக்காச்சோளம், கரும்பு, பருத்தி, காய்கறி பயிர்கள், பூக்களுக்கும் தெளிப்பு செய்து விவசாயிகள் பயன் பெறலாம் என்று குறிப்பிட்டார்.பயிற்சியின் இறுதியில் உளுந்துபயிரில் டிரோன் மூலம் திரவ நானோயூரியா பயன் படுத்தும் முறைசெயல் விளக்கம் மூலம் செய்து காண்பிக்கப்பட்டது.

இந்தபயிற்சியில் கிராமப்புற வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின் கிழ் குடுமியான்மலை வேளாண்மை கல்லுரி, திருச்சி வேளாண்மை கல்லுரி, ஈச்சங் கோட்டை வேளாண்மை கல்லுரி, மதர்தெரசா வேளாண்மை கல்லுரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை திருவரங்குளம் வட்டார அட்மா மாநில விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் தொழில் நுட்ப மேலாளர் கு.நாகராஜன் உதவி தொழில்நுட்ப மேலாளாகள் அ.ஆரோக்கியராஜ் மற்றும் ஸ்ரீநிதி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.



Updated On: 10 Jan 2023 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு