/* */

கடையை சேதப்படுத்திய காட்டு யானை-மக்கள் பீதி

கடையை சேதப்படுத்திய காட்டு யானை-மக்கள் பீதி
X

நீலகிரி மாவட்டத்தில் இரவில் உலா வந்த காட்டு யானை கடைகளை உடைத்து சேதப்படுத்தியது.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து மைசூர் செல்லும் தொரப்பள்ளி எனும் பகுதியில் இரவில் உலா வந்த காட்டு யானை அங்கிருந்த கடையை சேதப்படுத்தியது.கடந்த வாரம் இரண்டு யானைகள் சாலையில் உலா வந்ததால் வாகன ஓட்டிகளும் வியாபாரிகளும் பொதுமக்களும் மிகுந்த அச்சம் அடைந்தனர்.இந்நிலையில் நேற்று இரவு இப்பகுதியில் உலா வந்த காட்டு யானை அங்கிருந்த சிப்ஸ் கடையை சேதப்படுத்தியது. இதனால் கடையில் இருந்தவர்கள் வெளியே வராமல் கடையினுள் தஞ்சமடைந்தனர்.

யானை, கடையின் முன்பு சேதப்படுத்தி செல்லும் காட்சியை கடைக்காரர் தனது செல்போனில் பதிவு செய்துள்ள காட்சி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.அடிக்கடி யானைகள் உலா வருவதைக் கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் வனத்துறையினர் யானைகளை விரட்ட வேண்டும் என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Updated On: 17 April 2021 2:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க