/* */

உதகை குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் செந்நாய் கூட்டம் - மக்கள் பீதி

உதகையில், வனப்பகுதியை ஒட்டிய குடியிருப்பு பகுதிகளில் செந்நாய் கூட்டமாக உலா வருவதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

உதகை குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் செந்நாய் கூட்டம் - மக்கள் பீதி
X

உதகையில்,  அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் உலா வந்த பத்துக்கும் மேற்பட்ட செந்நாய்கள்.

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள எச்.பி.எஃப் பகுதியில், தபால் அலுவலகம், ரேஷன் கடை, அரசு பள்ளி, அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. வனப்பகுதியை ஒட்டிய பகுதி என்பதால் வன விலங்குகளின் நடமாட்டமும் காணப்படும்.

இந்நிலையில், இப்பகுதியில் சுமார் 10க்கும் மேற்பட்ட செந்நாய் கூட்டம் உலா வந்ததால், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சமடைந்தனர். இன்று அதிகாலை, செந்நாய்கள் திரிந்து கொண்டிருந்தன. இதை பார்த்து பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

மேலும் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் வீடுகளிலேயே தஞ்சம் அடைந்தனர். வனத்துறை செந்நாய் கூட்டத்தை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 8 July 2021 3:06 AM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  2. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  3. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  4. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  6. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  7. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  8. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி