/* */

உதகை நகரில் உலா வந்த காட்டெருமை கூட்டம்: மக்கள் அலறியடித்து ஓட்டம்.

உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே காட்டெருமைக் கூட்டம் உலாவந்ததால் நடை பயிற்சி மேற்கொண்ட மக்கள் ஒட்டம்பிடித்தனர்.

HIGHLIGHTS

உதகை நகரில் உலா வந்த காட்டெருமை கூட்டம்: மக்கள் அலறியடித்து ஓட்டம்.
X

ஊருக்குள் உலா வந்த காட்டெருமை கூட்டம்

உதகை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலை வேளையில் காட்டெருமை கூட்டம் உலா வருகிறது இந்நிலையில் இன்று மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மரவியல் பூங்கா, மான் பூங்கா, சாலையில் 20க்கும் மேற்பட்ட காட்டு எருமை கூட்டம் உலா வந்தது. அப்போது அச்சாலை வழியே நடை பயிற்சி மேற்கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

சிறிது நேரம் சாலையில் அங்கும் இங்கும் உலா வந்த காட்டெருமை கூட்டம் வனப்பகுதிக்குள் சென்றது. மேலும் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களும் அச்சத்துடன் காட்டெருமை கூட்டத்தைக் கடந்து சென்றனர். சாலையில் உலா வரும் காட்டெருமை கூட்டத்தைக் கண்டால் கற்களை வீசி எறிவதும், கூச்சலிட்டு துரத்தவும் கூடாது என வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Updated On: 13 May 2021 9:40 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...