/* */

உதகையில் சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி முகாம்

சுற்றுலா பயணிகளுக்கு நடமாடும் வாகனங்கள் மூலம் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி கலெக்டர் தெரிவித்தார்.

HIGHLIGHTS

உதகையில் சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி முகாம்
X

கலெக்டர் இன்னசென்ட் திவ்யா.

நீலகிரியில் 4 மாதங்களுக்கு பின்னர் சுற்றுலாத் தலங்கள் திறந்து செயல்பட்டு வருகிறது. தற்போது வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் தேவை இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சுற்றுலாப் பயணிகளால் உள்ளூர் மக்களுக்கு தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதை கருத்தில் கொண்டு ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களில், சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:

நீலகிரியில் கொரோனா பாதித்தவர்களுக்கு 3 மாதங்களுக்கு பின்னர் தடுப்பூசி செலுத்தப்படும். சுற்றுலா தலங்களில் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். நீலகிரி 2 மாநில எல்லைகளை ஒட்டி இருப்பதால், தொற்று பரவும் அச்சம் உள்ளது. சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளதால், உள்ளூர் மக்களுக்கு கொரோனா பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சுற்றுலா தலங்களுக்கு வெளியிடங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. முதல் மற்றும் 2-வது டோஸ் செலுத்திக் கொள்ளலாம். அதன்படி 27-ந் தேதி முதல் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ஊட்டி படகு இல்லம் ஆகிய 2 இடங்களில் சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடங்குகிறது. இதன் வரவேற்பை பொருத்து மற்ற சுற்றுலா தலங்களில் நடமாடும் வாகனங்கள் மூலம் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 24 Sep 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்