/* */

நீலகிரியில் சுற்றுப்பயணம் முடித்து டெல்லி புறப்பட்ட ஜனாதிபதி

உதகையில் இருந்து கோத்தகிரி சாலை வழியாக கோவை விமான நிலையம் செல்வதை தொடர்ந்து பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது.

HIGHLIGHTS

நீலகிரியில் சுற்றுப்பயணம் முடித்து டெல்லி புறப்பட்ட ஜனாதிபதி
X

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்ற கார்.

நீலகிரி மாவட்டம் உதகைக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனி ஹெலிகாப்டர் மூலம் 4 நாள் சுற்றுப்பயணமாக 3ம் தேதி உதகைக்கு வந்தார். கோவையில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலமாக உதகையில் உள்ள தீட்டுக்கல் ஹெலிக்கப்டர் தளத்திற்கு வந்தடைந்து வாகனம் மூலம் அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் குடியரசு தலைவர் தங்கியிருந்தார்,

நான்காம் தேதி குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரியில் நடைபெற்ற ராணுவ அதிகாரிகள் மற்றும் பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த ராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட குடியரசுத்தலைவர், நேற்று ராஜ்பவனில் ஓய்விற்குப் பின், இன்று காலை உதகையில் இருந்து கோத்தகிரி வழியாக சாலை மார்க்கமாக கோவை விமான நிலையம் புறப்பட்டார்.

முன்னதாக தனி ஹெலிகாப்டர் மூலம் காலை 10.30 மணிக்கு கோவை விமான நிலையம் புறப்படுவதாக இருந்த நிகழ்வு, அதிக மேகமூட்டம் காரணமாக ரத்து செய்யப்பட்டது. உதகையில் இருந்து கோத்தகிரி சாலை வழியாக கோவை விமான நிலையம் செல்வதை தொடர்ந்து உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு காவல் துறையினர் உள்ளிட்ட 1300கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 6 Aug 2021 10:39 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய...
  2. லைஃப்ஸ்டைல்
    பிறை காணும் பெருநாளுக்கு வாழ்த்துச் சொல்வோமா..?
  3. வணிகம்
    இந்திய மசாலாப் பொருட்களின் மீது உணவுப் பாதுகாப்பு அமைப்பின் புதிய...
  4. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  5. கோவை மாநகர்
    வேளாண் பல்கலைக் கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்!
  6. தொண்டாமுத்தூர்
    ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...
  7. ஈரோடு
    ஈரோட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்:...
  8. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  9. காஞ்சிபுரம்
    பிறந்த 3 மணி நேரத்திற்குள் சாலையில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை
  10. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு