/* */

உதகையில் தடுப்பூசி செலுத்துவதில் காலதாமதம். விரைவுபடுத்த மக்கள் வேண்டுகோள்

உதகையில் தடுப்பூசி செலுத்த அதிகாலை முதலே குவிந்ததால் விரைவாக தடுப்பு ஊசியை செலுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

HIGHLIGHTS

உதகையில் தடுப்பூசி செலுத்துவதில் காலதாமதம்.  விரைவுபடுத்த மக்கள் வேண்டுகோள்
X

உதகையில் தடுப்பூசி செலுத்த காத்திருக்கும் மக்கள்

கொரோனோ இரண்டாம் அலை தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியையும் அரசு முடுக்கி விட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மாவட்ட நிர்வாகம் தடுப்பூசியை செலுத்தும் முகாமை நடத்தி வருகிறது.

இதில் உதகை நகரில் இன்று தனியார் பள்ளியில் சுமார் 250க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டன அதிகாலை 7 மணி முதலே பொது மக்கள் குவிந்தனர். அதிகாலையில் குவிந்த பொதுமக்கள் மதியம் வரை காத்திருந்து ஊசி செலுத்த சென்றனர்.

ஒருசிலர் கூறும்போது அதிகாலை உணவு உண்ட பின்பு மதியம் வரை உணவு இல்லாததால் தடுப்பு ஊசி செலுத்தி மீண்டும் உடல் உபாதைகள் ஏற்படுமோ என அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், ஊசி செலுத்துவோர் மருத்துவ குழுவை அதிகப்படுத்தி பொது மக்களுக்கு விரைவாக தடுப்பூசிகளை செலுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

தடுப்பூசி செலுத்த வந்த பொது மக்களில் ஒரு சிலர் மதிய உணவை அங்கேயே உண்டனர். உணவு இல்லாதோர் ஊசியை செலுத்த அச்சமாக உள்ளதென தெரிவித்தனர்.

Updated On: 28 May 2021 9:39 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!