Begin typing your search above and press return to search.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: 2 சாட்சிகளிடம் இன்று விசாரணை
உதகை பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோடநாடு வழக்கு விசாரணையை டிஐஜி, எஸ்பி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
HIGHLIGHTS
கொடநாடு கொள்ளை வழக்கு விசாரணையானது தொடர்ந்து உதகையில் உள்ள பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்து வரும் நிலையில், குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களின் தொடர்பில் இருந்த நண்பர்கள் என அனைவரும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு வாகனங்களை வழங்கிய உரிமையாளர் நவ்ஷத், இடைதரகர் நஃபுல் ஆகிய இருவரும் இன்று ஆஜராகி உள்ளனர். அவர்களிடம் டிஐஜி முத்துசாமி, நீலகிரி எஸ்பி ஆஷிஷ் ராவத் , ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி டிஎஸ்பி சுரேஷ் , ஆய்வாளர் வேல்முருகன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.