/* */

கோடநாடு வழக்கு விசாரணை: 2 வார நீதிமன்ற காவல் நீட்டிப்பு

தனபால், ரமேஷ் ஆகிய 2 பேரை கூடலூர் கிளை சிறையில் இருந்து அழைத்து வந்து உதகை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

HIGHLIGHTS

கோடநாடு வழக்கு விசாரணை: 2 வார நீதிமன்ற காவல் நீட்டிப்பு
X

பைல் படம்.

கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ், திபு, சதீசன், சம்சீர் அலி, பிஜின், சந்தோஷ் சாமி, மனோஜ்சாமி, ஜித்தின்ஜாய், உதயகுமார் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தொடர் விசாரணை அடிப்படையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தடயங்களை அழித்ததாக கனகராஜின் அண்ணன் தனபால், நெருங்கிய உறவினர் ரமேஷ் ஆகிய 2 பேரை கடந்த அக்டோபர் 25-ம் தேதி போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து கூடலூர் கிளை சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். நீதிமன்ற காவல் முடிவடைந்ததால் போலீசார் தனபால், ரமேஷ் ஆகிய 2 பேரை கூடலூர் கிளை சிறையில் இருந்து அழைத்து வந்து உதகை கோர்ட்டில் மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

வழக்கில் கைதான தனபால், ரமேஷ், ஆகிய 2 பேருக்கு மேலும் 2 வாரம் நீதிமன்ற காவலை நீட்டித்து வருகிற டிசம்பர் 20-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Updated On: 6 Dec 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  2. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  3. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  4. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  5. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  6. சோழவந்தான்
    கொண்டையம்பட்டி தில்லை சிவ காளியம்மன் கோவில் வளையல் உற்சவ திருவிழா
  7. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  8. இராஜபாளையம்
    ராஜபாளையம் அருகே திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்த
  9. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி 70வது பிறந்தநாள்: பெருந்துறையில் சர்க்கரைப் பொங்கல்...
  10. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை