/* */

கோடநாடு வழக்கு: கைது செய்யப்பட்டுள்ள இருவருக்கும் ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சஞ்சய் பாபா, இரண்டாவது முறையாக ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.

HIGHLIGHTS

கோடநாடு வழக்கு: கைது செய்யப்பட்டுள்ள இருவருக்கும் ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி
X

கோடநாடு வழக்கில் கார் ஓட்டுநர் கனராஜின் சகோதரர் தனபால் மற்றும் உறவினர் ரமேஷ் ஆகிய இருவரது ஜாமின் மனு இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கோடநாடு கொலை,கொள்ளை வழக்கில், விபத்தில் பலியான கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோர் தடயங்களை அழித்த குற்றச்சாட்டுக்காக தனிப்படை போலீசார், அக்., 25 ம் தேதி சேலத்தில் கைது செய்து நீலகிரி மாவட்டம் கூடலுார் சிறையில் அடைத்தனர்.

இருவருக்கு டிச., 6ம் தேதி வரை நீதிமன்ற காவல் உள்ளது. இதற்கிடையே, இரண்டாவது முறையாக ஜாமின் கோரிய மனு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. குற்றச்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வக்கீல் பாலாஜி ஆஜரானார். அரசு தரப்பில், சிறப்பு வக்கீல்கள் ஷாஜகான், கனகராஜ் ஆஜராகினர். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சஞ்சய் பாபா, இரண்டாவது முறையாக ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.

Updated On: 26 Nov 2021 3:58 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  2. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  3. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  4. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  6. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  7. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  8. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  9. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  10. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...