/* */

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: இருவர் கைது

கோடநாடு கொலை வழக்கில், சாட்சியங்களை கலைத்ததாக கார் ஓட்டுனர்கனகராஜின் சகோதரர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: இருவர் கைது
X

கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு கூடுதல் விசாரணை, மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் மேற்பார்வையில் ஏ.டி.எஸ்பி. கிருஷ்ணமூர்த்தி தலைமையில், 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, ஊட்டியில் உள்ள பழைய மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. அரசு தரப்பு சாட்சிகள் குற்றம்சாட்டப்பட்டவர்கள் என அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதேபோல், கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 3ம் தேதி கோடநாடு எஸ்டேட் கணிணி ஆப்ரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை செய்து கொண்டார். அந்த வழக்கையும் தனிப்படை போலீசார் மறு விசாரணை செய்து வருகின்றனர். கோடநாடு எஸ்டேட் கொள்ளை வழக்கிற்கு மூலகாரணமாக இருந்த கனகராஜ், வாகன விபத்தில் இறந்துள்ளார். அந்த வழக்கையும் தனிப்படை போலீசார் சேலத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த விபத்து சம்பவம் மற்றும் கோடநாடு கொள்ளையில், சாட்சியங்களை கலைத்ததும் விசாரணையில் தெரியவந்தது அதன் அடிப்படையில் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் கனகராஜின் நண்பர் ரமேஷ் ஆகிய இருவரை, சேலத்தில் கைது செய்து மாலையில் நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். பின்னர், கூடலூர் கிளைச்சிறைக்கு தனிப்படை போலீசார் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.

Updated On: 26 Oct 2021 12:21 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  2. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  3. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  4. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  5. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  6. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  8. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  9. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  10. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...