/* */

உதகையில் காணொலி வாயிலாக நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

உதகையில், கலெக்டர் தலைமையில் காணொலி வாயிலாக விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

உதகையில் காணொலி வாயிலாக நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
X

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், இணையதளம் மூலமாக மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், இணையதளம் மூலமாக மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது. இதில், விவசாய சங்கங்களை சார்ந்த விவசாயிகள், தோட்டக்கலை இணை இயக்குநர் மற்றும் இதர துறையினை சார்ந்த அரசு அலுவலர்களும், இணையம் வழியாக கலந்து கொண்டனர்.

விவசாய சங்கங்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டு, உரிய துறை அலுவலர்களுக்கு முன்னதாக அனுப்பப்பட்டு தகுந்த விபரம் பெற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 23 கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு முடிவு காணப்பட்டது.

தோட்டக்கலைத்துறையின் மூலம் 2021-22-ஆம் ஆண்டு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து தோட்டக்கலை இணை இயக்குநர் எடுத்துரைத்தார். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் 2021-22-ஆம் ஆண்டிற்குதேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் மூலம் 675 எக்டருக்கும், ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கம் மூலம் 650 எக்டருக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விவரம் தெரிவிக்கப்பட்டது.

துணைநிலை நீர் மேலாண்மை திட்டம் மூலம் நுண்ணீர் பாசன திட்டம் அமைத்திருக்கும் விவசாயிகளுக்கு கிணறு அமைக்க, நீர் தொட்டி அமைக்க மற்றும் Diesel Engine Motor ஆகியவற்றிற்கு பின்னேற்பு மானியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ATMA திட்டம் தொடர்பான பயிற்சி தகவல்களை, வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்களை அணுகி தெரிந்து கொள்ளுமாறு விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். மேலும், விவசாயிகளின் பொது கோரிக்கைகளும் விவாதிக்கப்பட்டு உரிய விவரம் தெரிவிக்கப்பட்டது.

Updated On: 16 July 2021 12:31 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  2. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  3. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  4. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  5. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  9. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  10. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?