/* */

உதகையில் வாகன ஓட்டிகளுக்கு நகர டிஎஸ்பி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து

உதகையில், கொரோனா வழி நெறிமுறைகளை பின்பற்றி வரும் வாகன ஓட்டிகளுக்கு, டி.எஸ்.பி. மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

HIGHLIGHTS

உதகையில் வாகன ஓட்டிகளுக்கு நகர டிஎஸ்பி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து
X

முகக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு, மலர்க்கொத்து கொடுத்த ஊட்டி டி.எஸ்.பி. மகேஸ்வரன்.

புதிய ஊரடங்கு தளர்வுகள் அமலில் உள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் வாகனங்கள் அதிகமாக வந்து செல்கின்றன. இதனால் கொரோனோ கட்டுப்பாடுகள் கடைபிடித்து வாகன ஓட்டிகள் செல்கின்றனரா என, துறை சார்ந்த அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், உதகையில் போலீசார் சார்பில் வித்தியாசமான முறையில் கொரோனா வழிநெறிமுறைகளான முகக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும், ஆட்டோ மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் ஊட்டி டி.எச்.பி. மகேஸ்வரன் மலர் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

இதில், இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, போக்குவரத்து எச்.ஐ. வின்சென்ட் ஆகியோர், முகக்கவசம் அணிந்து வாகனங்களில் வந்த அனைவருக்கும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர்.

Updated On: 8 July 2021 7:39 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  2. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி
  3. லைஃப்ஸ்டைல்
    நான் வணங்கும் அன்னைக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. தேனி
    தேனியில் அன்னையர் தின மாவட்ட செஸ் போட்டிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு மனைவிக்கு அமுதமொழிகள்! திருமண நாள் வாழ்த்துகள்
  6. தேனி
    வணிகமயமான வீரபாண்டி திருவிழா! நெருக்கடியில் தவிக்கும் பக்தர்கள்
  7. சுற்றுலா
    ஊட்டிக்கு இ-பாஸ்: படிப்படியான வழிகாட்டி!
  8. தேனி
    தேனியில் 6வது நாளாக மழை! வீரபாண்டியில் வானில் வர்ணஜாலம்
  9. வீடியோ
    🔴LIVE : ஈழத் தமிழர்களை வைத்து சீமான் அரசியல் செய்கிறார் ! இலங்கை ஜெய...
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்