/* */

நீலகிரி மாவட்ட ஒக்கலிகர் சங்கத்தினரின் தேர் திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்பு

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒக்கலிகர் சங்கத்தின் முக்கிய உறுப்பினர்களும் திரளான பக்தர்களும் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டனர்.

HIGHLIGHTS

நீலகிரி மாவட்ட ஒக்கலிகர் சங்கத்தினரின் தேர் திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்பு
X

ஒக்கலிகர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற தேரோட்டம்.

உதகை மாரியம்மன், காளியம்மன் சித்திரை தேர் திருவிழா ஆண்டு தோறும் மார்ச் மாதம் துவங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பின் காரணமாக சித்திரை தேர் திருவிழா நடைபெறவில்லை.

இந்த முறை தமிழக அரசின் ஊரடங்கு தளர்வு கோவில் திருவிழாக்களை நடத்த அனுமதி அளித்ததை அடுத்து, இரண்டு ஆண்டுகள் நடைபெறாமல் இருந்த உதகை மாரியம்மன், காளியம்மன் தேர் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

இந்த தேர் திருவிழா 30 நாட்கள் 30 உபயதாரர்கள் மூலம் நாள்தோறும் நடைபெற உள்ளது. இதன் முதல் துவக்கமாக நீலகிரி மாவட்ட ஒக்கலிகர் சங்கம் சார்பில் முதல் நாள் தேர்த் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதில் பாரம்பரிய நடனத்துடன் கொட்டும் மழையில் தேர்த்திருவிழா நடைபெற்றது. இதில் உற்சவமூர்த்தி புலி வாகனத்தில் பூ பல்லக்கில் ஆதிபராசக்தியாக பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார்.

இதில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒக்கலிகர் சங்கத்தின் முக்கிய உறுப்பினர்களும் திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர்.

Updated On: 21 March 2022 1:12 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்