/* */

ஊட்டியில் படப்பிடிப்பு நடத்த நிபந்தனைகள்- கலெக்டர்

ஊட்டியில் படப்பிடிப்பு நடத்த நிபந்தனைகள்- கலெக்டர்
X

படப்பிடிப்புகள் நடத்த கொரோனா இல்லை என சான்று பெற்ற பின்னரே அனுமதிக்கப்படும் என நீலகிரி மாவட்ட கலெக்டர் கூறினார்.

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இன்று நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, உதகை நகராட்சி தினசரி சந்தை, உழவர்சந்தை, மத்திய பேருந்து நிலையம், உள்ளிட்ட பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் இடங்களில் திடீர் ஆய்வு நடத்தினார்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மார்க்கெட் பகுதி, உழவர் சந்தை இப்பகுதிகளில் விடுமுறை நாளான இன்று பொதுமக்கள் அதிகமாக கூட்டமாக கூடுவதால் வியாபாரிகள் கொரோனா கட்டுப்பாடுகளை எவ்வாறு பின்பற்ற வைத்து அவர்களுக்கு பொருட்கள் வழங்குகிறார்கள் எனவும் அனைத்து வியாபாரிகளும் நிச்சயமாக கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும், தடுப்பூசி செலுத்தாத வியாபாரிகளின் கடைகள் நகராட்சி மூலம் சீல் வைக்கப்படும் என கூறினார்.

மேலும் சுற்றுலா நகரமான நீலகிரியில் படப்பிடிப்புக்கு அனுமதி உள்ள நிலையில் இது குறித்து பேசிய கலெக்டர், படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் குழுவினர் கொரோனா தொற்று இல்லை என சான்றளித்தால் மட்டுமே படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தார்.

Updated On: 14 April 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்