/* */

நீலகிரியில் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடல்

நீலகிரியில் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடல்
X

நீலகிரியில் அனைத்து சுற்றுலா தலங்களும் 7 மாதங்களுக்கு பின் மீண்டும் மூடப்பட்டுள்ளது.

தற்போது, கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசு, 20 ம் தேதி முதல் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு அறிவித்துள்ளது.நாளை, (20ம் தேதி) முதல் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா உட்பட அனைத்து பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தலங்கள் மீண்டும் 7 மாதங்களுக்கு பின் மூடப்படுகிறது. இந்நிலையில் ஊட்டி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, தலைமையில் கொரோனா தடுப்பு குறித்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து அரசு துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.

பின், நிருபர்களிடம் மாவட்ட கலெக்டர் திவ்யா, கூறுகையில், நீலகிரியில், நாளை, (20ம் தேதி) முதல், சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்படும். சுற்றுலா போர்வையில் யார் வந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தொழில் ரீதியாக வருகை புரிவோருக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். இ- ரிஜிஸ்ட்ரேஷன் முறை தொடரும் என்றார்.கொரோனா தொற்று நோயாளிகள் சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனை மற்றும் நட்சத்திர உணவகங்கள் சிகிச்சை மையங்களாக செயல்பட முன் வந்தால் அனுமதி வழங்கப்படும் என்றார்.

Updated On: 19 April 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!
  2. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  3. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  4. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  8. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  10. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...