/* */

பள்ளிக்குள் புகுந்து கரடி செய்த அட்டகாசம்

கரடியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

பள்ளிக்குள் புகுந்து கரடி  செய்த அட்டகாசம்
X

உதகை ஊராட்சி ஒன்றியம் உல்லத்தி ஊராட்சிக்கு உட்பட்ட கடசோலை பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.2 நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று காலை பள்ளி திறக்கப்பட்டது. 2 வகுப்பறைகளின் கதவுகள் உடைந்து இருந்தது. பள்ளிக்குள் கரடி புகுந்து சேதப்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

தலைமை ஆசிரியர் அறையில் இருந்த பீரோவை திறந்து பதிவேடுகளை வெளியே எடுத்து வீசியதால் சிதறி கிடந்தது. சமையல் அறைக்குள் நுழைந்த கரடி அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை தின்று சேதப்படுத்தி உள்ளது. இதனால் மாணவர்கள் உள்ளே அமர முடியாமல் பள்ளி வளாகத்தில் அமர்ந்து இருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த உதகை வடக்கு வனச்சரகத்தினர் பள்ளிக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அருகே உள்ள வீட்டு கதவை உடைத்து பொருட்களை சேதப்படுத்தி சென்றது. கரடி நடமாட்டத்தான் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இதனால் கரடியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Updated On: 4 April 2022 3:27 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...