/* */

தீப்பிடித்து எரிந்த கார்- உயிர் தப்பிய குடும்பம்

தீப்பிடித்து எரிந்த கார்- உயிர் தப்பிய குடும்பம்
X

ஊட்டியிலிருந்து கல்லட்டி செல்லும் மலைப்பாதையில் கார் தீப்பிடித்து எரிந்தது. இதில் காரில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ஊட்டியில் இருந்து கல்லட்டி செல்லும் மலைப்பாதை 38 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட செங்குத்தான மலைப் பாதை ஆகும். நாள்தோறும் இச்சாலை வழியே கேரளா மற்றும் மைசூர் செல்லக்கூடிய இலகுரக வாகனங்கள் ஆயிரக்கணக்கில் சென்று வருகின்றன.இந்நிலையில் நேற்றிரவு மைசூரில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்த கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட கார் திடீரென 18 வது கொண்டை ஊசி வளைவில் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் காரை விட்டு இறங்கியதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீப்பிடித்த காரை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதனால் இச்சாலை வழியே சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்படைந்தது. மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 10 March 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?