/* */

குன்னூரில் நியாயவிலை கடை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா

குன்னூர் பாரத்நகர் பகுதியில் ரூ. 16 லட்சம் மதிப்பில் நியாயவிலை கடை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

HIGHLIGHTS

குன்னூரில்  நியாயவிலை கடை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா
X

நீலகிரி மாவட்டம் குன்னூர் பேரட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பாரத்நகர் பகுதியில், அண்மையில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதியில் செயல்பட்டு வந்த நியாயவிலை கடை, சில நாட்களுக்கு முன்பு மழையால் சேதமடைந்தது. இதையடுத்து, 16 லட்சம் மதிப்பீட்டில் நியாயவிலை கடையை சீரமைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன் பேரில், சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து நியாயவிலை கடையை முழுவதுமாக இடித்து, புதிதாக கட்டுவதற்காக பணிகள் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டது. அதன்படி, அதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைபெற்றது.

சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய ஊராட்சி பெருந்தலைவர் சுனிதா, வட்டார வளர்ச்சி அலுவலர் ராமன், ஒன்றியக்குழு உறுப்பினர் கருணாநிதி, பொறியாளர் மணிகண்டன், பேரட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீஷ், மற்றும் துணைத்தலைவர் சுகுணா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 16 July 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  4. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  5. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  6. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  7. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  8. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டம்
  9. ஈரோடு
    ஈரோடு வந்த ரயிலில் கிடந்த 9.250 கிலோ கஞ்சா பறிமுதல்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு 71 பேர் தேர்வு