/* */

கீழ்குந்தா: முழு வீச்சில் தூய்மைப்பணிகள்

உதகை அருகே கீழ்குந்தா பேரூராட்சியில் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காதோருக்கு அபராதம் .

HIGHLIGHTS

கீழ்குந்தா: முழு வீச்சில்  தூய்மைப்பணிகள்
X

குன்னூர் அருகே உள்ள கீழ்குந்தா பேரூராட்சியில் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அனைத்து பகுதிகளிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

நீலகிரி மாவட்டம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின்படி நகராட்சி, பேரூராட்சி ,ஊராட்சி, மூலம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கீழ்குந்தா பேரூராட்சியில் செயல் அலுவலர் ரவிக்குமார் தலைமையில் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கி மூலம் சமூக இடைவெளியை பின்பற்றவும் கிருமிநாசினிகள் பயன்படுத்தவும், மாஸ்க் அணியவும், அறிவுரைகள் வழங்கப்பட்டன. மேலும் பொது இடங்களில் எச்சில் துப்புவோர்களுக்கும் கடைகளில் சமூக இடைவெளி இல்லாமல் வியாபாரம் செய்யும் கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இது மட்டுமல்லாமல் 25க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை கொண்டு பேருந்து நிலையங்கள் வணிக வளாகங்கள், பிரதான சாலைகள் என அனைத்துப் பகுதிகளும் தூய்மை படுத்தப்பட்டு கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டது.

Updated On: 16 May 2021 8:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!
  3. உசிலம்பட்டி
    மதுரை அருகே திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வாகனம்
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!
  5. வீடியோ
    மீண்டும் வெடித்தது Suriya-வின் சர்ச்சை மும்பையில் என்ன நடக்கிறது ? |...
  6. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
  8. ஈரோடு
    சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்லூரியில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  9. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  10. ஈரோடு
    சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்:...