/* */

தேயிலை பறிக்கும் உடையில் வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்

தொழிலாளர்களின் நிலையை உணர்த்துவதற்காக தேயிலைப் பறிக்கும் தொழிலாளி உடையில் வந்து மனுதாக்கல் செய்ததாக வேட்பாளர் தெரிவித்தார்.

HIGHLIGHTS

தேயிலை பறிக்கும் உடையில் வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்
X

தேயிலை பறிக்கும் உடையில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்.

கோத்தகிரி பேரூராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்கு உறுப்பினர் தேர்தல் வரும் 19 ம் தேதி நடக்கிறது. இதில் போட்டியிட கட்சி வேட்பாளர்கள் மட்டுமின்றி ஏராளமான சுயேட்சை வேட்பாளர்களும் ஆர்வத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று 21 ஆம் வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட சுயேட்சை வேட்பாளராக வளர்மதி என்பவர் தேயிலைப் பறிக்கும் தொழிலாளி உடையில் வந்து தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பின்னர் அவர் தெரிவிக்கையில், 21 ஆம் வார்டில் பெரும்பாலனவர்கள் தேயிலைப் பறிக்கும் கூலித் தொழிலாளர்கள் ஆவர். இந்த வார்டில் சாலை வசதி, சுடுகாடு வசதி, குடிநீர் வசதி, தடுப்புச் சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. எனவே தொழிலாளர்களின் நிலையை உணர்த்துவதற்காக தேயிலைப் பறிக்கும் தொழிலாளி உடையில் வந்து மனு தாக்கல் செய்ததாக தெரிவித்தார்.

Updated On: 4 Feb 2022 7:01 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  2. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  3. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  4. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  5. க்ரைம்
    பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  7. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் அன்னையர் தினத்தையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம்
  8. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  9. இந்தியா
    நன்கொடை வழங்கியதில் இந்திய அளவில் இவர் தான் நம்பர் ஒன் பெண்மணியாம்
  10. இந்தியா
    தண்ணீர் சேமிப்பிற்காக சர்வதேச விருது பெற்ற இந்திய பெண் கர்விதா...