/* */

அம்மன் கோவிலை சேதப்படுத்திய காட்டு யானை

தேயிலை தொழிலாளர்களால் கட்டப்பட்ட அம்மன் கோவிலை மாலை நேரம் உலா வந்த 9 யானைகள் கொண்ட கூட்டம் உடைத்து சேதப்படுத்தியது.

HIGHLIGHTS

அம்மன் கோவிலை சேதப்படுத்திய காட்டு யானை
X

சேதமடைந்த கோவில்.

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள தேவாலா அட்டி பகுதியில் பாண்டியாறு அரசு தேயிலை தோட்டம் உள்ளது. இங்குள்ள தேயிலை தொழிலாளர்களால் கட்டப்பட்ட அம்மன் கோவிலை மாலை நேரம் உலா வந்த 9 யானைகள் கொண்ட கூட்டம் உடைத்து சேதப்படுத்தி உள்ளது.

கோவிலின் முன்புற கதவு மற்றும் சட்டர்களை உடைத்தும், உள்ளே இருந்த பொருட்களை இழுத்து சேதப்படுத்தியும் சென்றுள்ளன. இதேபோல் அருகே உள்ள பொன்னூர் வனப்பகுதியில் இருந்து வந்த இந்த காட்டு யானை கூட்டம் தேயிலை தோட்டத்தில் நடமாடியதோடு கோவிலையும் உடைத்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று உள்ளன.

அடிக்கடி இந்த கோவிலை காட்டு யானைகள் சேதப்படுத்தி வருவதால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுவரை மூன்றுக்கும் மேற்பட்ட முறை இந்த கோவிலை காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தி உள்ளதாகவும் கோவிலை பாதுகாக்க கோவிலை சுற்றி தோட்ட நிர்வாகம் சார்பில் மின் வேலி அமைத்து தர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பவ இடத்தில் நாடுகாணி வனச்சரகர் பிரசாத் மற்றும் வனத்துறையினர் பார்வையிட்டு விசாரணை நடத்தி சென்றுள்ளனர்.

Updated On: 30 Sep 2021 3:10 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...
  2. வீடியோ
    Captain Vijayakanth-க்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது !#captain...
  3. லைஃப்ஸ்டைல்
    கண்முன்னே காணும் கடவுள், 'அம்மா'..!
  4. வீடியோ
    தாமரைக்கும் வாக்களிக்கும் மழலை ! #modi #pmmodi #bjp...
  5. வீடியோ
    INDI Alliance-யை படுகுழிக்கு தள்ள Modi உபயோகித்த அந்த வார்த்தை 😳 |...
  6. லைஃப்ஸ்டைல்
    இசையின் அசைவு நடனம்..!
  7. வீடியோ
    🔴LIVE : சாம் பிட்ரோடா விவகாரம் பொங்கி எழுந்த நாராயணன் திருப்பதி ||...
  8. சினிமா
    இந்தியன் மட்டுமா? கமல்ஹாசன் வாங்கிய தேசிய விருதுகள்! என்னென்ன...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  10. வீடியோ
    🔴LIVE :ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் அனல்...