கூடலூரில் 1 மாத சிறுத்தை குட்டி மீட்பு

கூடலூரில் 1 மாத சிறுத்தை குட்டி மீட்பு
X

கூடலூரில் மீட்கப்பட்ட சிறுத்தை குட்டி

சிறுத்தை குட்டியை மீட்ட தேயிலைத் தொழிலாளர்கள் வனத்துறையினரிடம் ஒப்படைக்க, சிறுத்தை குட்டி வனப்பகுதிக்குள் விடப்பட்டது

கூடலூர் மற்றும் அதை சுற்றி வனப்பகுதிகள், தேயிலைத் தோட்டங்கள் காணப்படுவதால் யானை சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் இருந்து வருகிறது.

இந்நிலையில் கூடலூர் அருகே பொலம்பட்டி பகுதியில் இன்று அதிகாலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணிக்கு செல்லும்போது தேயிலைத் தோட்டத்தில் நீண்ட நேரம் சத்தம் கேட்டதையடுத்து தொழிலாளர்கள் அந்த இடத்தில் சென்று பார்க்கும் பொழுது பிறந்து ஒரு மாதமே ஆன சிறுத்தை குட்டி இருந்துள்ளது.

உடனடியாக தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ பகுதிக்கு வந்த வனத்துறையினர் சிறுத்தை குட்டியை மீட்டு தாய் சிறுத்தை சுற்றித்திரியும் பகுதியில் பத்திரமாக விட்டனர்

Tags

Next Story
ai in future agriculture