/* */

ஆட்கொல்லி புலி இன்று சிக்குமா? மோப்ப நாய் உதவியுடன் தேடுதல் வேட்டை

ஆட்கொல்லி புலியை பிடிக்க, கர்நாடகா மாநிலம் பந்திபூரில் இருந்து மோப்ப நாய் ராணா அழைத்து வரப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நீலகிரி மாவட்டம் மசினக்குடி வனப்பகுதியில், ஆட்கொல்லி புலி நடமாடுகிறது. இதுவரை நான்கு பேரை கொன்றுள்ளதால், மக்கள் பீதியில் உள்ளனர். எனவே, ஆட்கொல்லியாக மாறிய புலியை உயிருடனோ அல்லது மயக்க ஊசி செலுத்தியோ பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணி, பத்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், அதிரடிப் படையினர் புலியை தீவிரமாக தேடி வருகிறார்கள். ஆட்கொல்லி புலியைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது 120 பேர் 20 குழுக்களாகப் பிரிந்து வனத்துறை கடந்த 10 நாட்களாக தேடி வருகின்றனர்.

வனப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினருக்கு, இதுவரை கண்ணில் சிக்காத புலி, போக்கு காட்டி வருகிறது. ஏற்கனவே புலியை தேடும் பணியில், நாட்டு நாய் அதவை ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அத்துடன், கர்நாடக மாநிலம் பந்திப்பூரில் இதேபோல் மனிதர்களை வேட்டையாடி புலியை துரிதமாக கண்டுபிடித்த மோப்ப நாய் ராணாவும் தற்போது வரவழைக்கப்பட்டு உள்ளது.

ஐந்து பேர்கொண்ட கர்நாடக குழுவினர், மோப்பநாய் ராணாவுடன் தேடுதல் பணியை துவக்கியுள்ளனர். 150 வன ஊழியர்கள் , இரண்டு மோப்ப நாய்கள், இரண்டு கும்கி யானைகள் என அனைவருக்கும் இதுவரை கண்ணில் சிக்காத புலி இன்றாவது சிக்குமா என எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

Updated On: 4 Oct 2021 9:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  5. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  6. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
  8. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  9. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  10. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!